×

அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க கோரி சிஐடியூ தொழிற்சங்கம் காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, அக்.20: முறைசாராத் தொழிலாளர்களுக்கான நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரியும், அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க கோரியும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று தொழிலாளர்கள் உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். கொரோனா கால நிவாரணத் தொகை அனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. முறையாக பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காவிட்டாலும் அவர்களுக்கும் வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் முறையாக பதிவை புதுப்பித்தவர்களில் பலருக்கும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே, பதிவை புதுப்பித்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையும் வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று புதுக்கோட்டை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். இதில் பலர் பங்கேற்றனர்.

Tags : CITU ,
× RELATED ரூ.10 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு தொழிலாளர் போராட்டம்