×

பெரம்பலூரில் பரபரப்பு மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர், அக். 20: பெரம்பலூர் நகரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். பெரம்பலூர் 12வது வார்டு ராஜாஜி தெருவை சேர்ந்த பெயிண்டர் சண்முகவேல் (38). இவர், தனது நண்பர்களான சக்திவேல் (41), தனசந்தர் (23), சதீஷ்குமார் (35) ஆகியோருடன் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் தலையாட்டி சித்தர் ஆசிரமம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சண்முகவேல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குணசெல்வி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...