×

துர்நாற்றத்தால் மக்கள் அவதி வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

வேதாரண்யம், அக்.20: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல்சரகம் நாகக்குடையான் கிராமத்தில் தனிப்படை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்துபணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பெருமாள்கோவில் அருகில் உள்ள மெயின்ரோட்டில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கலவை மணல் ஏற்றி வந்ததும், அதை ஏற்றி வருவதற்கு உரிய அனுமதி இல்லாதாதால், மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டிவந்த செட்டிபுலம் கிராமம் பச்சையங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்மணி (20) என்பவரை பிடித்து, கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்