×

ஈரோட்டில் 90 பேருக்கு கொரோனா

ஈரோடு, அக். 20:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின்படி நேற்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பானது 9223 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதையடுத்து இதுவரை 8112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 1000க்கும் குறைவாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை 113 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Tags : Corona ,Erode ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...