×

சசிகலா அதிமுகவில் தவிர்க்க முடியாத நபராக திகழ்வார் வேலூரில் எம்எல்ஏ கருணாஸ் பேட்டி சிறையில் இருந்து வெளியே வந்ததும்

வேலூர், அக். 18:சிறையில் இருந்து வெளியே வந்ததும் சகிகலா அதிமுகவில் தவிர்க்க முடியாத நபராக திகழ்வார் என்று வேலூரில் எம்எல்ஏ கருணாஸ் கூறினார். வேலூரில் நேற்று எம்எல்ஏ கருணாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் தவிர்க்க முடியாத நபராக திகழ்வார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை முதலில் வழி நடத்தியவர் அவர்தான். இன்றைக்கும் சசிகலா அதிமுக பிரதிநிதியாகவே பார்க்கப்படுகிறார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் மாற்றம் நிகழுமா? என்பது பின்னர் தான் தெரியும். பிரதமர் நினைத்ததை தடுத்து, தான் நினைத்தவரை முதல்வர் ஆக்கி சென்றுள்ளார். ஆகவே சசிகலா அதிமுகவில் முக்கியமானவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது’ என்றார்.

Tags : Sasikala ,MLA ,jail ,Karunas Potti ,AIADMK ,Vellore ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்