×

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

கடையநல்லூர், அக்.18:    கடையநல்லூரில் குளத்தில் மூழ்கி மாணவர் பலியானார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் செவல்விளை  தெருவை சேர்ந்த  மாடசாமி மகன் சுந்தர் (14). இவர் ஆய்க்குடியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில் வடபுறம் உள்ள பெரியகுளத்தில் சுந்தர் குளிக்க சென்றுள்ளார்.  அப்போது  நீச்சல் தெரியாத நிலையில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் கொடுத்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  நிலைய அலுவலர் குணசேகர்  தலைமையில் ஏட்டு ஜெயரத்தினகுமார், வீரர்கள் முருகன், குமரேசன் ,தங்கத்துரை, முத்துக்குமார் ஆகியோர் குளத்தில் இறங்கி  நீரில் மூழ்கிய மாணவரின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடையநல்லூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student ,pool ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...