×

தூத்துக்குடி அருகே பரிதாபம் தண்ணீர் டிரம்மில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

புதுக்கோட்டை, அக். 18: புதுக்கோட்டையை அடுத்த கோரம்பள்ளம், கே. சுப்பிரமணியாபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ராஜ்குமார். இவரது மனைவி லாண்டா.  இவர்களது மகன் ஜெஸ்வின் சாமுவேல் (3). லாண்டாவுக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை கைக்குழந்தையை லாண்டா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். சிறுவன் ஜெஸ்வின் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் லாண்டா வெளியே வந்த போது மகனை காணாமல் அதிர்ச்சியடைந்தார். தேடிய போது அங்குள்ள டிரம் தண்ணீரில் தலைகீழாக கிடந்தான். உடனே சிறுவனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...