×

தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் உள்பட 75 பேருக்கு கொரோனா

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல், வங்கி ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.  தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணி புரியும் 45 வயது சுகாதார பணியாளர், அரூர் சந்தைமேட்டில் 40 வயது வக்கீல், வேப்பம்பட்டியில் 43 வயது டைலர், அச்சல்வாடியில் 31 வயது தச்சர், அரூரில் 45 வயது துணை சர்வேயர், கோவிந்தசாமிநகரில் 30 வயது வங்கி ஊழியர், மொபிரிப்பட்டியில் 59 வயது வங்கி ஊழியர், பாலக்கோடு சர்க்கரை ஆலை பகுதியில் 70 வயது மளிகைக்கடை ஊழியர், நல்லம்பள்ளி எர்ரப்பட்டியில் 57 வயது வியாபாரி, காரிமங்கலத்தில் 55 வயது விவசாயி, குப்பாங்கரையில் 30 வயது வியாபாரி, உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து நேற்று கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானர். இதுவரை மாவட்டத்தில் 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5101 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு, 4256 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு திரும்பினர். 799 பேர் அரசு மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 84 பேர் குணமாகினர்.

Tags : Corona ,lawyer ,Dharmapuri district ,
× RELATED கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்