×

மொரப்பூர் மேம்பாலத்தில் விதிமீறும் வாகனங்களால் தொடரும் விபத்துகள்

அரூர், அக்.18: அரூரிலிருந்து மேம்பாலம் வழியாக சென்றால் கம்பைநல்லூர், இடது புறம் திரும்பினால் பேருந்து நிலையம், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்லமுடியும். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்கு சென்று விட்டு, பாலத்திற்கு கீழ் வழியில் செல்கிறது. ஆனால், கிருஷ்ணகிரி, கம்பைநல்லூர் பகுதியிலிருந்து வரும் போது மேம்பாலம் வழியாக வந்து வளைத்து செல்கின்றனர். இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்களுடன் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், மேம்பாலம் வழியாக செல்ல கூடாது என நெடுஞ்சாலைதுறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும், வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Accidents ,Morappur ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி