×

செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது நெய்வேலி அருகே பரபரப்பு

நெய்வேலி, அக். 18: செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த செடுதான்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர்(48), விவசாயி. இவரது மகன் சசிகுமார்(23), டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். சசிகுமார், தனது தந்தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், தனது வீட்டில் இருந்த ஆடுகளை திருடி சென்று சசிகுமார் விற்றுள்ளார். இந்நிலையில், நேற்று மீண்டும் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், தனது தந்தையை கையால் பலமாக தாக்கியுள்ளார். மேலும் காலால் கழுத்தில் மிதித்ததாகவும் தெரிகிறது. இதில் சேகர் மயங்கி விழுந்தார்.  உறவினர்கள் அவரை மீட்டு  என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே சேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சேகர் மனைவி சக்தி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு  செய்து, சசிகுமாரை ைகது செய்தனர். செலவுக்கு பணம் தராத காரணத்தால் மகனே தந்தையை அடித்து கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...