×

கஞ்சா விற்ற 5 பேருக்கு குண்டாஸ்

ராஜபாளையம், அக்.18: ராஜபாளையம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பொன்னுச்சாமி மகன் முரளியிடம் 1, 200 கிராம் கஞ்சா, சுந்தர மகன் சதுரகிரி 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ராமலிங்கபுரத்தில் பயில்வான் மகன் பாஸ்கரனிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் சமுத்திரம் மகன் சதீஷ் குமாரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, சீனியப்பன் மகன் கணேசனிடம் 1 கிலோ 100 கிராம் என மொத்தம் 5 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு