×

மாவட்டத்தில் அதிமுக 49வது ஆண்டு விழா

கம்பம், அக்.18: அதிமுக. கட்சி தொடங்கி 49ம் ஆண்டு தொடக்கத்தினை முன்னிட்டு அக்கட்சியினர் கம்பத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். கம்பம் நகர செயலாளர் ஜெகதீஸ் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜாங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் இளையநம்பி, நகர அவைத்தலைவர் காந்தி, துணை செயலாளர் அப்துல்ஆசிக் வகித்தனர். தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட பொருளாளர் சோலைராஜா, கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழக செயலாளர் முத்து வெங்கட்ராமன், முன்னாள் எம்பி பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் .சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஊர்வலமாக சென்று ஆண்டிபட்டி பஸ்நிலையம் அருகே கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

Tags : AIADMK ,district ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...