×

மயிலாடும்பாறை அருகே சாலைப்பணி தீவிரம்

வருசநாடு, அக்.18: மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்காடு மலைக்கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சாலைகளில் மெட்டல் கற்களை குவித்து விட்டு பணிகளை கிடப்பில் போட்டிருந்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலைப்பணி தீவிரமடைந்துள்ளது. மலைக்கிராமங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் விரைந்து சாலைப் பணியை முடிக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறியாளர் ராஜகோபால், முகம்மது ஹாரீஸ், தொழில்நுட்ப உதவியாளர்கள் அழகுராஜா, பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மலைக்கிராம மக்கள் கூறுகையில்,`` சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். ஆனால், தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதன் காரணமாக சாலை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே, தினகரன் நாளிதழுக்கும், பணியை துவக்கியுள்ள அதிகாரிகளுக்கும் நன்றி’’ என்று கூறினர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...