×

வேளாண் மைய பூமிபூஜை

சிவகங்கையில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் பாஸ்கரன் பூமி பூஜையை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் இளங்கோ, இணை இயக்குநர் வெங்கடேசன், துணை இயக்குநர் தனபால், பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகநதி, உதவி இயக்குநர் தங்கபாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட இந்துசமய அறநிலையக்குழு தலைவர் சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சசிக்குமார், செல்வமணி, பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ