×

பிரான்மலை மீட்பு போராட்டம்

சிங்கம்புணரி பஸ்நிலையம் முன்பு முல்லை நில தமிழர் விடுதலை கட்சி சார்பில் பிரான்மலை மீட்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்புலி கண்ணன், மாவட்ட செயலாளர் முத்து, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பரம்புமலை பாதுகாப்பு இயக்க தலைவர் கர்ணன், வன வேங்கை கட்சி இரணியன், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பிரான்மலை அடிவாரத்தில் தனியார் கல், கிராவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும், தனியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு