×

வீட்டில் நகை திருட்டு

முதுகுளத்தூர் அருகே கீரனூரை சேர்ந்தவர் முனியசாமி. விவசாயி. இவர் நேற்று வீட்டிற்கு சிறிதுதூரத்தில் நின்று உறவினர்களிடம் பேசி கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி
யடைந்தார். தொடர்ந்து உள்ளே பார்த்த போது அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...