×

சோழவந்தான் அருகே அந்தோணியார் ஆலயம் திறப்பு

சோழவந்தான், அக்.18:  சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் 100 ஆண்டு பழமையான புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிறிதாக இருந்ததால் ரூ.30 லட்சம் செலவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில், பங்குத் தந்தைகள் எட்டுவர்டு பிரான்சிஸ் சேவியர், பால் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை குரூஸ் ஆகியோர் முன்னிலையில், மதுரை உயர்மறை மாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆலயத்தை திறந்து வைத்து திருப்பலியுடன் ஆசி வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் பவுன்முருகன், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,St. Anthony's Church ,Cholavanthan ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு