×

இயற்கை உரம் விற்பனை

சின்னாளபட்டி, அக்.18: சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா செம்பட்டி சாலையில் அஞ்சுகம் காலனியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் (உரக்கிடங்கு) மண்புழு உரம் இயற்கை உரம் ஆகியவற்றை பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான நடுப்பட்டி, செம்பட்டி, வக்கம்பட்டி, கலிக்கம்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, பண்ணைப்பட்டி, வீரக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், பூச்செடிகள் பயிரிடுவதற்கு முன்பு பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் இருந்து இயற்கை உரங்களை வாங்கிச் செல்கின்றனர்.  இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறுகையில், ஒரு கிலோ இயற்கை உரம் ரூபாய் ஒன்றுக்கு கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். நேற்று மட்டும் 10 டன் உரங்கள் விற்க்கப்பட்டது என்று கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...