×

அரையபுரம் தட்டுமால் படுகையை வகை மாற்றம் செய்து 53 விவசாயிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

பாபநாசம், அக். 18: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சாமு. தர்மராசன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: பாபநாசம் படுகை அரையபுரம் தட்டுமால் படுகை இனாம் நிலம் கொண்ட கிராம பகுதியாகும். மேற்படி பாபநாசம் படுகை அரையபுரம் தட்டுமால் படுகை கிராமத்தில் குடிவாரம் உள்ள உழுது சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரயத்து வாரியாக கொண்டு வந்து பட்டா வழங்கிட உச்ச நீதி மன்றம் மாநில அரசிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் கடந்த 1912 முதல் 2019 வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று நடத்தி உள்ளனர். அரசு நில ஆணையர் மூலம் அதிகாரிகள் முன்னிலையில் நடைப் பெற்ற நில சர்வேப்படி பாபநாசம் படுகை அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளின் நலன் கருதி அரையபுரம் தட்டுமால் படுகையை ரயத்து வாரியாக மாற்றம் செய்து 53 விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு