×

தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு பேராவூரணியில் முகக் கவசம் அணியாத 131 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

பேராவூரணி, அக். 18: பேராவூரணியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பேராவூரணி ரயில்வே ஸ்டேஷன் அருகில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் முன்னிலையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு, தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார், வேன்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சோதனையின்போது முகக்கவசம் அணியாத 131 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், புண்ணியநாதன், பூவலிங்கம், ராம்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : corona examination ,Peravurani ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்