×

அரசு வாகனம் மீது வேன் மோதல்அதிகாரி உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

புதுக்கோட்டை, அக்.18:புதுக்கோட்டை மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக செயல் அலுவலர் குமார்(57), விராலிமலை கூடுதல் பொறியாளர் கார்த்தி (40), எழுத்தர் வீரமணி(36) ஆகிய மூவரும் பணி நிமித்தமாக அரசு காரில் திருச்சி வந்துவிட்டு, மீண்டும் புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டனர். காரை சிங்கமுத்து(45) என்பவர் ஓட்டினார். கார் மண்டையூர் பகுயில் வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த வேன் மோதியது. இதில் சிங்கமுத்து படுகாயமடைந்தார். குமார், கார்த்தி, வீரமணி ஆகிய மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டையூர் போலீசார் அனைவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் ஆலங்குடியை சேர்ந்த கந்தசாமி மகன் வீரமணி(50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : van collision officer ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ