×

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு


பெரம்பலூர், அக்18: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் அருகேயுள்ள நூத்தப்பூர் கிராமத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வருபவர் நல்லான் (70). இவர் வெளியில் சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்து இருந்த தாலிக்கொடி, செயின், மோதிரம் உள்ளிட்ட9 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்த நல்லான் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்து நல்லான் கைகளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : neem ball ,house ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை