×

மயிலாடுதுறை, சீர்காழியில் நடந்தது பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் உரிய நேரத்தில் மின்சாரம் வராததால் மக்கள் அவதி

கொள்ளிடம், அக்.18: கொள்ளிடம் பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவித்து உரிய நேரத்தில் மின்சாரம் வராததால் மக்கள் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளை சேர்ந்த 200 கிராமங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்வதாக அறிவித்து நேற்று காலை சரியாக ஒன்பது மணிக்கு மின் நிறுத்தம் செய்தனர். இதனால் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தனர்.

தெருக்கள்தோறும் உள்ள குடிநீர் குழாய்களை நோக்கி குடங்களுடன் சென்ற பெண்கள் குடிநீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அதே வேளையில் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5 மணிக்கு மேலாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். எனவே இனிவரும் காலங்களில் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை காலை 10 மணிக்கு மேலும் மாலை 5 மணிக்குள்ளும் வைத்துக் கொள்ள வேண்டும். மின்சார வாரியம் சார்பில் அறிவித்த உரிய நேரத்திலேயே மீண்டும் மின்சாரத்தை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mayiladuthurai ,Sirkazhi ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...