×

காரைக்காலில் கஞ்சாவிற்ற 2 பேர் கைது

காரைக்கால், அக்.18: காரைக்கால் நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (32), அவரது நண்பர் விஜயகுமார்(42). இருவரும் நேற்றுமுன்தினம் காரைக்கால் தலத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 400 கிராம் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...