தோகைமலை, அக். 18: கரூர் மாவட்டம் தோகைமலையில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தோகைமலை ஒன்றிய கிளை சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்புடன் 3 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். சங்கத்தின் ஒன்றிய தலைவர் கலியராஜ், மாவட்ட துணை தலைவர் நேசமணி, நிர்வாகிகள் இளங்கோவன், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர;.
இதில் கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்ப பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை அரசு தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலர்கள் செந்தில்குமார், முருகானந்தம், மணிவேல், ரவிச்சந்திரன், ரமேஷ், பாலமுத்து, தங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.