×

கரூர் ராமானூர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பணி தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், அக். 18: கரூர் ராமானூர் மெயின் சாலையில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் விரைவில் மூடப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர் பகுதியில் குடிநீர் சீரமைப்பு பணிக்காக சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்த நிலையிலும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது என இந்த பகுதியினர் கூறுகின்றனர். பள்ளம் காரணமாக இரண்டு சக்கர வாகன போக்குவரத்து நடைபெறுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே குடிநீர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தால் உடனடியாக பள்ளத்தை மூட வேண்டும். பணிகள் இன்னமும் நிலுவையில் உள்ள பட்சத்தில் அந்த பணிகளை விரைந்து முடித்து பள்ளத்தை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Motorists ,non-closure ,Karur Ramanur Main Road ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...