×

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பாஜ பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர், அக். 16:  கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் (28). இவர் திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார்.  இவர் பாஜ மாவட்ட பிரசார அணி தலைவராக உள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில் அதே கம்பெனியில் பணிபுரிந்த வலசைவெட்டிக்காடு  கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பாரத் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று மாலை திருவள்ளூர் கலெக்டர்  அலுவலகம் முன்பு தன் உடலின் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டும், பெட்ரோலை குடித்துவிட்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

 இதை கண்ட போலீசார் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  பாஜக பிரமுகர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : office ,BJP ,Tiruvallur Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...