×

மாணவிக்கு பாலியல் தொல்லை

ஆவடி, அக். 16: ஆவடியில்  வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, புதிய ராணுவ சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24) கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்க அருகில் 17வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள்.  இவள், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த 11ந்தேதி மாணவி, சுரேஷ்குமார் வீட்டில் இருந்து அனைவரும் ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று விட்டனர். பின்னர், மாணவி சர்சுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மாணவியால் வீட்டின் பூட்டை திறக்க முடியவில்லை. இதனை அடுத்து, மாணவி சுரேஷ்குமாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

 பின்னர், அவர்  மாணவி வீட்டின் பூட்டை திறந்து கொடுத்துள்ளார். இதன் பிறகு, சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் சுரேஷ்குமார் சென்று தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.   பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரித்ததில் சுரேஷ்குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் சுரேஷ்குமாரை நேற்று மாலை கைது செய்தனர். இதன் பிறகு, போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Sexual harassment ,student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...