×

வள்ளியூரில் 100 பேர் திமுகவில் இணைந்தனர்

பணகுடி, அக்.16: வள்ளியூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 பேர் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் முதல்வராக இப்போதே அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றார்.

இதில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  ஆதிபரமேஸ்வரன், ஆதிபாண்டி, மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சிவா, கோபி.கோபாலகண்ணன், துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் சுபாஷ், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் வக்கீல் கிளாட்ஸ்டன், பேச்சாளர் பனிபாஸ்கர், 18வது வார்டு செயலாளர் சுரேஷ், வள்ளியூர் பேரூர் கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் மகேஷ்சிங், துணை அமைப்பாளர் சுரேஷ்பாக்கியம், கண்மணி, வடலிவிளை பாஸ்கர், சண்முகபுரம் லாரன்ஸ், சங்கர், பிரவின், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி