×

அண்ணா பல்கலை. துணைவேந்தரை கண்டித்து தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, அக். 16:  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அண்ணா  பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக  இளைஞர் அணி,  மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக  இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் வடக்கு மதியழகன், தெற்கு ராமஜெயம்  தலைமை  வகித்தனர். மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் தெற்கு அருண்குமார், வடக்கு  பாலகுருசாமி  முன்னிலை வகித்தனர். இதில் திரளாகப் பங்கேற்ற நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
 ஆர்ப்பாட்டத்ல்,  இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், பிரதீப், இம்மானுவேல், ஜோதிராஜா,  சிம்புநட்ராஜ், அனஸ், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சீனிவாசன்,  ஜார்ஜ்புஷ், அருண்சுந்தர், சங்கரநாராயணன், செல்வின், முத்துராமன்,  கோவில்பட்டி நகர இளைஞர் அணி மகேந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த  கபிரியேல்ராஜ்,

மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாணவர் அணி துணை  அமைப்பாளர்கள் மாரிச்செல்வம், தங்கத்துரைப்பாண்டியன், ரமேஷ், தம்புஸ்,  பிரவீன், புஸ்பராஜ், தமிழ்மணி, தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பகுதி செயலாளரர்  ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சாரதி. பிரதிநிதி சுப்பையா, பகுதி இளைஞர் அணி  பிரவீன், அனிஸ்டன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பலர்  பங்கேற்றனர்.

Tags : Anna University ,youth students ,DMK ,Thoothukudi ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...