×

விவசாயிகள் சட்டத்திற்கு எதிர்ப்பு காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

நாகர்கோவில், அக்.16: விவசாயிகள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பும் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தனர். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் மகேஷ்லாசர், வட்டார தலைவர் அசோக்ராஜ், ஜெரால்டு கென்னடி, காலபெருமாள், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நவீன்குமார், மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து, தங்கம் நடேசன், மாவட்ட பொதுசெயலாளர் ராஜதுரை, ராஜபாண்டியன், ஜெயசிங், வடலி மகாலிங்கம், அனிதா உட்பட கலந்துகொண்டனர்.

Tags : Launch ,Congress ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!