×

இடப்பிரச்னை முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 6 பேர் மீது வழக்கு

சின்னமனூர், அக். 16: சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் புலிவாகனன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவனாண்டி, விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று புலிவாகனன் மனைவி சுகன்யா (30) தெருவில் நடந்து சென்றபோது, சிவனாண்டி (48), அவரது மனைவி தங்கம் (45), தங்கேஸ்வரன் மகன் பிரசன்னா, சிவனாண்டி மகன் அபிஷேக் ஆகியோர் வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைக் கேள்விபட்ட புலிவாகனன் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரையும் அடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகன்யா, தங்கம் ஆகியோர் தனித்தனியே சின்னமனூர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், படுகாயம் அடைந்த சுகன்யாவை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ