×

ஓபிஎஸ் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

தேனி, அக். 16: தேனியில் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கூட்டரங்கில், ஊரக பகுதிகளில் குடிநீர் வழங்குவது தொடர்பாக துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கும், இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்திருந்தனர். இது குறித்து செய்தித்துறை மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி காரணம் கூறாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மதியம் தேனியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை கலெக்டர் பல்லவி பல்தேவ் சந்தித்து பேசினார். அப்போது அரசு கட்டிட ஒப்பந்ததாரர்களும் இருந்தனர். ‘தேனியில் கட்டப்பட்டு வரும் சட்டக்கல்லூரி, குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தாரர்களுடன் துணை முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது.

Tags : OPS ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி