×

காளையார்கோவில் அருகே அடுத்த ஊருக்கு வயல் வழியே 3 கி.மீ தூரம் பிணத்தை தூக்கிச் செல்லும் கிராம மக்கள் பொதுமயானம் அமைத்து தர வலியுறுத்தல்

காளையார்கோவில், அக்.16: காளையார்கோவில் அருகே பொது மயானம் இல்லாததால் சாலைவசதியில்லாத அடுத்த ஊருக்கு நெல்வயல் வழியே 3 கி.மீ தூரத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் அவலம் தொடர்கிறது.
காளையார்கோவில் அருகே கிழவனூர் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லை. இதனால் பக்கத்து ஊர் கண்மாய்மேட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் சுமார் மூன்று கி.மீ தூரம் இறந்தவர்களின் சடலத்தை நெற்ப்பயிர்களுக்கு இடையே தூக்கிச்செல்லும் அவலம் தொடர்கிறது. இந்த கிராமத்திற்கு பொதுமயானம் வேண்டி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகிழவனூர் கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : town ,Kaliningrad ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி