சோழவந்தான், அக்.16: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சிலம்பு போட்டி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோமதி கண்ணன் முன்னிலை வகித்தார். ராணுவ வீரர் விஜி வரவேற்றார். இதையடுத்து இந்தியன் சிலம்பு பள்ளி பயிற்சியாளர்கள் இப்பகுதி மாணவர்கள், சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பின்னர் அவர்களுக்கிடையே சிலம்பு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சிலம்ப பள்ளி செயலாளர் கணேசன், இணை செயலாளர் பொன் சங்கரமூர்த்தி ஆகியோர் சான்றிதழுடன்,பரிசுகள் வழங்கினர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜா என்ற பெரியகருப்பன், மணி என்ற பெரியசாமி மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.