×

மாணவன் மர்ம மரணத்தில் அதிகாரிகள் சமரசத்தால் போராட்டம் வாபஸ்

உசிலம்பட்டி, அக்.16:  பேரையூர் தாலுகா, சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கன்னியப்பன் மகன் ரமேசை, போலீசார் அழைத்து சென்ற நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். இதன் காரணமாக சாப்டூர் எஸ்.ஐ.க்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீண்டும் இவர்களை பணியில் சேர்த்ததால், எஸ்.ஐக்கள் 2 பேர்களையும் கைது செய்ய வேண்டும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4வது நாளாக பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம், ஆர்டிஓ ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவுக்கு வந்தது. அதில் இறந்த மாணவன் ரமேஷ் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடு தொகையும், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால், கிராம பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : death ,student ,protest ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...