×

மேலூர் அருகே கள்ளத்தொடர்பால் மாணவர் கொலை? போலீசார் தீவிர விசாரணை

மேலூர், அக்.16:  மேலூர் அருகே மாணவரை வெட்டி கொலை செய்து மூட்டையாக வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலூர் அருகே தெற்குபட்டி பெரியாற்று கால்வாய் அருகே நேற்று முன்தினம் இரவு சாக்கில் கட்டப்பட்டு உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மேலூர் ஆட்டுக்குளத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் மனோகரன் மகன் மதன்குமார்(23) என தெரிந்தது. இவர், சிவில் இன்ஜினியரிங் முடித்து கட்டிட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆட்டுக்குளத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அந்த மோதலில் மதன்குமாரை அந்நபர் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை தேடும் பணியில் மேலூர் போலீசார் தீவிரமாக உள்ளனர். சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student ,smuggling ,Melur ,investigation ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...