×

வேட்டை கும்பலிடம் 30 கவுதாரி பறிமுதல்

திண்டுக்கல், அக், 16: தாடிக்கொம்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று மாட்டு வண்டியில் வேட்டை கும்பல் வந்து கொண்டிருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுமலை வனச்சரக அதிகாரிகள், மாவட்ட வன பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வேட்டையாடுவதை குல தொழிலாக செய்து வரும் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அங்கு தங்குவதற்கான இடத்தை தயார் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களிடம் சோதனை செய்ததில் வேட்டையாடக்கூடாத பறவை இனமான 30க்கும் மேற்பட்ட கவுதாரி பறவைகள், அதை பிடிக்க பயன்படுத்திய வலை இருந்தன. இதையடுத்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, மேலும் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் அங்கு வரவே, வேட்டை கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட வன பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gowdari ,gang ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை