×

விண்ணப்பிக்க அழைப்பு துறையூர் அருகே வளர்ப்பு பன்றிகள் மாயம்

துறையூர், அக்.16: துறையூர் அருகே விஸ்வாம்பாள் சமுத்திரம்(வடக்கு) கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(45). இவருக்கு சொந்தமாக பாலகிருஷ்ணாபட்டியிலிருந்து எஸ்என் புதூர் செல்லும் சாலையில் தனது வயக்காட்டில் 7 பன்றிகள் வளர்த்து வந்தார். கடந்த 10ம் தேதி பன்றிகளை வயலில் இருந்த பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் வயலுக்கு சென்று பார்த்தபோது வயலில் அடைக்கப்பட்டிருந்த 7 பன்றிகள் காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த வந்த சங்கர் உப்பிலியபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி