×

ஆலங்கோட்டை, இடையாநத்தம், பாமணி ஊராட்சியில் உயர் மின்கோபுர விளக்குகள் துவக்கம்

மன்னார்குடி, அக்.16: மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்கோட்டை, இடையர் நத்தம்,பாமணி ஊராட்சிகளில் உயர் மின்கோபுர விளக்குகளை அமைத்து தருமாறு கிராம மக்கள் திமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மாவட்ட ஊராட்சி தலைவர் தலை யாமங்கலம் பாலு மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ஆலங்கோட்டை, இடையர் நத்தம்,பாமணி ஊராட்சிகளில் உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பணிகள் துவக்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்நிலையில், உயர் மின்கோபுர விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மேலவாசல் தன்ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலங்கோட்டை எழிலரசி மணிச்செல்வம், இடையர் நத்தம் சுமதி முருகானந்தம், பாமணி சாரதி சரவ ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு உயர் மின்கோபுர விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் சோபா கணேசன், கலைவாணி மோகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகதை பாரதிமோகன், செந்தாமரைச்செல்வி அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Idayanatham ,Bamani Panchayat ,
× RELATED பாமணி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்