×

விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை மருங்கப்பள்ளத்தில் மயான இடம் ஆக்கிரமிப்பு

சேதுபாவாசத்திரம், அக். 16: சேதுபாவாசத்திரம் மருங்கப்பள்ளத்தில் மயானத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமியிடம் மருங்கப்பள்ளத்தை சேர்ந்த முருகேசன் புகார் மனு அளித்தார். அதில் சேதுபாவாசத்திரம் அடுத்த மருங்கப்பள்ளம் அம்பல குளம் அருகில் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமான மயானம் அமைந்துள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்கு ஏற்கனவே முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்த முள்வேலியை பிரித்து விட்டு மயான இடத்தை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளார். ஏற்கனவே மயானத்துக்கு போதிய இடவசதியின்றி தடுமாறி வரும் நிலையில் தற்போதுள்ள இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மயானத்துக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : vendors ,burial ground ,
× RELATED பழநி கிரிவல வீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி