×

திருவரங்குளம் அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

புதுக்கோட்டை, அக்.16: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் சங்கத் தலைவர் ராஜாகண்ணு தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் முருகையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளியின் நலன்கருதி நீண்ட நாட்களாக காலியாக உள்ள காவலாளி பணிக்கு புதிதாக ஆல் நியமனம் செய்ய மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது. மேலும் பள்ளி வளாகத்தில் மண்டி உள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்வது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் அன்பழகன் வரவேற்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags : Parent Teachers Association Meeting ,Thiruvarangulam Government School ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...