கீழ்வேளூர், அக்.16: அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து மத்திய அரசிடம் அடமானம் வைக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும், இதற்கு காரணமான அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ள சூரப்பவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியின் முன் நாகை தெற்கு, நாகை வடக்கு, திருவாரூர், காரைக்கால் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவர் அணி துணை செயலாளர் மன்னை சோழராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் நாகை தெற்கு மலர்வண்ணன், நாகை வடக்கு அலெக்சாண்டர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் நாகை தெற்கு உதயக்குமார், நாகை வடக்கு செந்தில்குமார், திருவாரூர் அமுதா சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எம்எம்.சித்திக், புதுச்சேரி மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட பல் கலந்து கொண்டனர்.