×

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

காரைக்கால், அக்.16: காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் காலாண்டு ஆய்வுக்காக நேற்று திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில், கலெக்டர் அலுவகலத்தில், வாக்குச்சாவடி மறு சீரமப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Tags : Inspection ,Office ,Karaikal Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...