×

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறை,அக்.16: மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி. இவரது மனைவி சரண்யா (27). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தாருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கொல்லைபுற வழியாக வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த சரண்யாவின் கழுத்திலிருந்த 3 பவுன் தாலி செயினை சப்தமின்றி அறுத்து சென்றுள்ளனர். ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது கழுத்திலிருந்த தாலி செயினை காணவில்லை. முன்பக்க கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையில் கொல்லைபுறத்தில் திறந்திருந்த கதவு வழியாக மர்ம நபர்கள் புகுந்து தாலிச்செயினை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags : Tali ,house ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா