×

தாந்தோணிமலை அருகே அக்கா கணவர் இறந்த துக்கம் பாத்திர வியாபாரி தற்கொலை

கரூர், அக். 16: கரூர் தாந்தோணிமலை அருகே அக்கா கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பாத்திர வியாபாரி விஷம் குடித்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன்(48). பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 11ம் தேதி இவரின் அக்கா கணவர் மாரடைப்பினால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த முத்துப்பாண்டியன் கடந்த 13ம் தேதி மாலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், குருணை மருந்து குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Trader ,suicide ,Thanthonimalai ,
× RELATED லாரி மோதியதில் வியாபாரி பலி