×

தரைமட்ட பாலங்களில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி, அக்.16: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர், காளியப்பகவுண்டன்புதூர், சூலக்கல், ஜமீன்கோட்டாம்பட்டி, ராமபட்டிணம், தென்சங்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக செல்லும் வழித்தடத்தில், மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் செல்லும்போது, அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த தரைமட்ட பாலம் வழியாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வருகின்றன. ஆனால், கிராமம் வழியாக செல்லும் தரைமட்ட பாலத்தில் தடுப்புகள் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகன போக்குவரத்து மட்டுமின்றி மக்கள் நடமாட்டமும் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் ஆங்காங்கே உள்ள தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ground bridges ,
× RELATED கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; 4 தரைப்...