×

இளம்பெண்ணை காரில் கடத்தல்?


கோவை அக், 16: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மருத்துவமனையில் பணியாற்றிய 22 வயது இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. நள்ளிரவில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கடத்தல் நடந்ததாக கூறப்பட்ட மருத்துவமனை வளாகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இளம்பெண் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்.  அவரும் மருத்துவமனையில் தங்கி தந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது நர்சிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர்.

நேற்று நள்ளிரவில் பணியில் இருந்த அந்த நர்சுடன் அந்த வாலிபர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அவருடன் மேலும் சில வாலிபர்கள் இருந்தனர்.  அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஊழியர்கள் நர்சை சில மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும், தடுக்க வந்தவர்களை மிரட்டியதாகவும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் இளம்பெண் மற்றும் அந்த வாலிபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நர்ஸ் காதல் மோகத்தில் உடன் சென்றாரா? அல்லது கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டாரா? என ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car abduction ,
× RELATED 70 லட்சம் கேட்டு ஒப்பந்ததாரர் காரில்...