×

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்

கீழ்பென்னாத்தூர், அக்.2: கீழ்பென்னாத்தூர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் கமலி (22). வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியன்(28). இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். இதனால், வீட்டைவிட்டு வெளியேறி இருவரும், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர். பின்னர், பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கமலியை அவரது காதல் கணவர் அருண்பாண்டியனுடன் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...