×

மோர்தானா அணை நிரம்பியது அமைச்சர்கள் மலர் தூவினர்

வேலூர், அக்.2: மோர்தானா அணை நிரம்பியதால் அமைச்சர்கள், கலெக்டர் மலர் தூவி வரவேற்றனர். தமிழக-ஆந்திர எல்லையில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி வழிகிறது. நேற்று அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். இதில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், குடியாத்தம் தாசில்தார் வத்சலா, காட்பாடி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அப்பு, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் சிவா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சண்முகம். உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், குணசீலன், கோபி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ministers ,Mordhana Dam ,
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...